title


பன்னீர் மீன்கள்

எந்தக் கடற்கரை போனாலும்
கால் நனைத்து விடாதே

பாவப்பட்ட மீன்கள்
இன்னும் பழகவில்லை
பன்னீரில் வாழ ….

*

நுனிநாக்கை கடித்துக்கொண்டு
சாய்ந்து நீயெழுத்தும்
ஒவ்வொரு எழுத்தும்
ஆங்கிலமேயானாலும்
உயிர் கொண்டலையும் மெய் எழுத்துக்கள்….

நிமிர்ந்து என்னை நோக்கி
நீ சிந்தும் புன்னகையில்
முற்றிலும் சாய்ந்து
விழுகின்றேன் நான்….

*

No comments: