title


தொடுவான் தூரம்

பகிந்துகொள்ள யாருமேயில்லாமல்
ஒவ்வொரு கோப்பைத் தேநீரையும்
தனியே அருந்துகிறேன்…

கேட்பதற்கு யாருமேயில்லாத
கவிதைகளை
என்னிடமே மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொள்கிறேன்

இணைந்து வர பாதங்கள் இல்லாத
ஒரு பயணம்
எப்போதும் போகிறேன்…

சாய்ந்து அழ தோள்களில்லாமல்
விழி நீர் துடைக்கும் கரங்களில்லாமல்
ஒரு பெருந்துக்கம்
நானே விழுங்கி
என்னுள்ளே செமிக்கிறேன்

மொத்தத்தில்...

ஒருபோதும் நெருங்கமுடியாத
அடிவானம் நோக்கியே
அத்தனை அடிகளையும்
எடுத்து வைக்கிறேன் :(

No comments: