title


(தே)வதை

தொடர்ந்து பேசுபவள் அல்ல நீ
பொறுமையை சோதிக்கும் இடைவெளிவிட்டு
தவம் பூர்த்தியடைந்த
சொற்களுக்கு மட்டுமே மோட்சமளிப்பாய்

குழலினிது… யாழினிது…
என்பேன்
உன் முதல் சொல் கேட்கும்வரை…
**

உன் ஸ்பரிசம் தாங்கிவரும்
கையெழுத்தின் வளைவுகளில் நான்
சிக்கிக்கொள்வதுகூட புரிகிறது எனக்கு

நீ அனுப்பும்
குறுந்தகவல் எழுத்துக்களிலேயே
பித்தேறி நிற்கும்
என் எளிய மனதை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறேன் நான் ?

No comments: