title


வெறுமை

தேங்கிக் கிடக்கும்
சொற்களின் கனம் தாள மாட்டா
கவிஞன் கானகம் ஏகினான்
குழி பறித்து
சொல் உமிழ்ந்து
மண் மூடி நிமிர்ந்தான்
விருட்சமாகி சலசலத்து
தொடர்ந்து வந்தன சொற்கள் !
நொந்து போய்
மலைமுகட்டில்
பின்னர் பள்ளத்தாக்கில்
வீசி எறிந்தான் சொற்களை…
இரு மடங்கு எதிரொலிப்பாய்
மீண்டு வந்தன வார்த்தைகள் !
இறுதி முயற்சியாய்
பெருகியோடும் நதியொன்றின் நீர் மீதில்
எழுதலானான் தன் வரிகளை
கவிதையை கரைத்துக் கொண்டது நதி..
சருகானன் கவிஞன் !

No comments: