title


சொயம்புலிங்கம் VS த்ரிஷ்யம்

வெள்ளிக்கிழமை (ஜூலை 3), மதியம் 2:30 மணி, கோவை சென்ரல் தியேட்டர். பட அறிவிப்பு வந்த நாளிலிருந்தே மனதுக்குள் தோன்றிக்கொண்டிருந்த சின்ன சந்தேகம் அதன் உச்ச கட்ட அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இத்தனைக்கும், சின்ன வயதிலிருந்தே அடிப்படையில் நான் ரஜினி ரசிகன், என்றாலும் வளர வளர ”நம்மவருக்கும்” ரசிகனானேன். சந்தேகத்தின் துவக்கப்புள்ளி வேறொன்றுமில்லை, என்னதான் நம்மாளு புத்திசாலியானாலும், சமயத்தில் 15 வருஷம் கழிச்சு “சே, என்னா படம்டா”ன்னு எல்லாரும் சொல்லுற படத்த இப்பவே எடுத்துட்டு (குருதிப்புனல், ஹேராம்) அது யாருக்கும் புரியாம (புடிக்காம) ப்ளாப் ஆகுற ராசி உள்ளவரு. அதுமாதிரி ஏதாவது ஆகிடுமோ அப்படின்னுதான்.

துவக்கத்திலிருந்தே எனக்கு அந்த சிந்தனை தோன்றிக்கொண்டே இருந்தது. ஏற்கனவே “த்ரிஷ்யம்” பார்த்திருந்த காரணத்தால், ”பாபநாசம்” படத்தில் காட்சிக்கு காட்சி ஒரு ஒப்பீடு எனக்குள் நிகழ்ந்து கொண்டேயிருந்தது. அதற்கு தகுந்த மாதிரியே, ஒரு சமயமும் ஒப்பீட்டில் த்ரிஷ்யமும், மறுசமயம் பாபநாசமும் மாறி மாறி சிறப்பாயிருப்பதாக தோன்றின. ஆனாலும் எனக்கென்னவோ, சுயம்புலிங்கத்தை விட ஜார்ஜ்குட்டியின் கை ஒருபடி மேலிருந்ததாகவே தோன்றியது. இது எல்லாம் இறுதிக்காட்சி வரையில்தான்.

படத்தின் இறுதிக்காட்சியில், “ஐ.ஜி” கீதாவிடமும், அவரது கணவர் பிரபாகரிடமும், சுயம்புலிங்கம் பேசும் அந்த ஒரு காட்சியிலேயே, அதற்கு முந்தய 3 மணி நேர ஒப்பீட்டையும் உடைந்தெறிந்து விட்டார் நம்ம “சொயம்புலிங்க” அண்ணாச்சி. இந்த மொழிமாற்ற படத்தில் மொழி மட்டும்தான் மாற்றப்பட்டுள்ளது. ஆன்மா அப்படியே.

அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும், அது அடிக்கடி நிகழ்ந்தால் அதன் பெயர் “கமல்”.
smile emoticon