title


சிறுதுளி


புறங்கை மீதோ
உச்சந்தலையிலோ
அண்ணாந்து பார்க்கும்போது
முன் நெற்றியிலோ
அன்றி வேறெங்குமோ
பட்டுத் தெறித்துவிழும்
முதல் ஒற்றை மழைத்துளி
உணர்த்துவதேயில்லை
காத்திருக்கும் கனமழையின்
அடர்த்தியை !

போலவே
ஒற்றைச் சொல்லும்
ஓராயிரம்
வருடச்சண்டைகளும் !