title


கண்ணீர்த் தூரிகை

தாளின் நிறமே உமிழ்கிறது
எனக்கான தூரிகை

வெறும் காற்றில்
விரலாலே வரைந்து போகிறேன்
என்னுடைய தடங்களை

யாருமறியாமல் என்னுள்ளே
புதைக்கின்றன என்னுடைய ஓவியங்கள்…

செரிக்க மறுத்து
திமிறி எழும் சித்திரங்கள்
பின்னிரவில் வெளிப்படும்
தலையணை நனைக்கும்
கண்ணீராய் !

No comments: