title


யாசகன்

இருட்டில்
உன் பெயர் சுமந்து ஒளிறும்
கைப்பேசி காண்கையில்
முழு நிலவு கண்ணுறும்
குழந்தையாகிறேன் நான்
*

ஆயிரமாயிரம் சொற்கள்
அகழ்ந்தெடுத்தும்
எதுகை மோனை தளை
சீர் தூக்கிப் பார்த்தும்
மனம் நிறைய காதலை சுமந்திருந்தும்
வாய்க்காமல் போகின்றது
ஒரு கவிதை….

ஆனால் நீ உன்
ஒற்றைப் புன்னகையில்
தானமிட்டுப் போகின்றாய்
ஓராயிரம் கவிதைகளை….

No comments: