அன்பின் ஆதிரா,
எந்த விசயத்துக்காய்
நான் பயந்தேனோ, அந்த விசயம் மெல்ல மெல்ல நடந்துகொண்டிருக்கிறது. அனுதினமும் இடைவெளி
அதிகாரித்துக் கொண்டே இருக்கிறது. ஆயுளுக்குமான ஒரு மிகச்சிறந்த நட்பாய்த் தொடரவேண்டுமென்றால்,
அந்த நட்பில் எவ்வளவு உண்மையிருக்க வேண்டும். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது,
என்னால் நட்பில் பொய்யை கலக்க இயலாது. இத்தனை வலிக்கும் காரணம் ஒரு உண்மை சொன்னதுதானே.
இந்த இருதினங்களாக,
எத்தனையோ முறை உனக்காக Type செய்த செய்திகளை நானே அழித்திருக்கிறேன். சிலமுறை மனது
கேட்காமல் உன் எண்ணை dial செய்துவிட்டு ஆனால் அழைக்காமல் விட்டிருக்கிறேன். என் மீதான
உன்னுடைய கோபத்துக்கு நியாயமான காரணம் இருக்கக்கூடும். நான் உன்னை தொந்தரவு செய்யமாலிருப்பதற்கும்
ஒரு காரணம் இருக்கிறது. இயல்பாகவே, என்னுடன் இருப்பவர் யார் மனதும் புண்படக்கூடாது
என்பது மட்டுமல்ல எல்லோரும் சிரித்துக்கொண்டிருக்க வேண்டும் என எண்ணுபவன் நான். கருத்து
வேறுபாடுகள் கொண்டவர்களுடன் கூட மனம் நோகும்படியான விவாதங்களை தவிர்ப்பவன் நான். ஆனால்
நாம் தொலைப்பேசியில் பேசிய கடைசி இரு உரையாடல்களில் நீ என்னால் மனம் கஷ்டப்பட்டது எனக்குப்புரிந்தது.
என்னுடனான உரையாடல்களால் நீ புண்படுவாயானால் அதை தவிர்க்கின்ற (தவிர்ப்பது எனக்கு கடினமென்றாலும்)
வலியை நானே கரைத்துகொள்கிறேன். ஒருவகையில் விளக்கமுடியாத கீழ்மை படிந்த என் மனதுக்கு
இந்த தண்டனை அவசியம்தான் என்றால் அது அப்படியே ஆகட்டும்.
ஒன்றை மட்டும்
புரிந்துகொள், இந்த கடிதம் மட்டுமல்ல, இதற்கு முன்பாக நான் பேசிய அத்தனை சொற்களுக்கும்
பின்னால் இருப்பது அன்புதானேயன்றி வேறெதும் இல்லை.
-
நான்