title


காலம்

மீண்டும் மீண்டும்
மாறிக் கொண்டிருக்கிறது
காலம்

பருவ காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர் காலம்

.
.
.
.

ஏதோ ஒரு நம்பிக்கையுடன்
காத்திருக்கிறோம்

விடிவு காலமும் வருமென...

வழி

சதையும் எலும்புமாய்
உடல் கொண்டு
அடைந்திருந்தது போதும் !

மாறிட வேண்டும்
சூரிய ஒளியாய்
காற்றாய்
குறைந்தபட்சம் நீராய்

பூட்டிக் கொள்ளுங்கள்
கதவுகளை...

சன்னல்களைக் கூட
சாத்திவிடுங்கள்...

சாவித்துவாரம் போதுமெனக்கு
நான் சென்று வர

மீட்டாத வீணை

அபஸ்வரமாய்
மீட்டப்படுவதை விட
மூலையிலேயே
இருக்கட்டும் வீணை

அபஸ்வரத்தைக் காட்டிலும்
அமைதியே மேலானது !