title


முக்கிய முடிவு !?!

”மறுபடியும் தி.மு.க உயர்நிலை செயற்குழு கூட்டம்.. முக்கிய முடிவு எடுக்கப்படும் ?” – என்ன முக்கு முக்கினாலும் முடிவெல்லாம் எடுக்க முடியாது... தமிழ்நாட்டில் ”ஜெ” டெல்லியில் “சோனியா” இப்படி அம்மாக்கள் ஆடும் ஆட்டத்தை வேடிக்கை வேணும்னா பாக்கலாம்...

பூமேடை – தோட்டிகளின் காந்தி

கொள்கைப் பிடிப்புள்ள, தன்னலமற்ற, மக்களின் மீது உண்மையான பரிவு கொண்ட எண்ணற்ற தலைவர்கள் இப்போதும் இந்தியாவில் உண்டு. ஆனால் அவர்கள் எவரும் முற்குறிப்பிட்டது போல் தலைவர்களாக கருதப்படுவதில்லை. மாறாக மாறிவரும் நவீன உலகின் மாற்றத்துக்கு ஈடுகொடுக்கவியலாத அறிவீனர்களாகவும், கோமாளிகளாகவுமே கருதப்படுகின்றனர். வெட்டப்பட்ட மரங்களின் அருமை மழையில்லாது தவிக்கும் நாட்களில் மட்டுதான் புலப்படவேண்டுமென்பது மரங்களின் தலையெழுத்து. போலவே இவர்களுக்கும் வாழ்ந்து முடிந்தபின் போடப்படும் வாய்க்கரிசியின் அளவு அரிசி கூட வாழும்போது கிடைப்பதில்லை. ஆனால் இவ்வளவுக்குப் பின்னரும் தன்னை பழிப்போருக்காகவும் சேர்த்தே குரலெழுப்பும் மனிதர்களும் இருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட ஒரு காந்தியவாதியின் கதையை “கோட்டி” எனும் தலைப்பில் எழுதியுள்ளார் திரு. ஜெயமோகன். கதையின் தலைப்பே உண்மையான சேவகனுக்கு மக்கள் மத்தியிலிருக்கும் மரியாதையை காட்டிவிடுகின்றது. கதை நாகர்கோயிலில் வாழ்ந்த இந்திய சுதந்திரப்போராட்ட வீரர் ’பூமேடை’ எஸ். ராமையா (1924-1996) அவர்களின் அந்திமக்காலத்தில் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. இடைவிடாத போராட்டங்கள், கேட்க பெரும் கூட்டமில்லாவிட்டாலும் தளராமல் நடத்தப்பட்ட கூட்டங்கள் என திரு. பூமேடை அவர்களின் போராட்ட வாழ்க்கை கதையில் ஒரு சோற்றுப்பதம் என்ற அளவில் மெல்லிய நகைச்சுவையினூடே பதிவுசெய்யப்பட்டுள்ளது. எவ்வித சமரசமுமின்றி தன் வாழ்வினை மேற்கொண்ட திரு. பூமேடை ராமையா தன் இறுதி தினத்திலும் கூட அரசாங்க மருத்துவமனையில் அநீதிக்கெதிராக குரலெழுப்பி மடிவதாக முடிகின்றது கதை.

நிச்சயம் இந்த கதை ஒரு உண்மைச்சம்பவமல்ல. ஆனால் இவாறெல்லாம் நடந்திருக்காது என்றோ நடக்க இயலாது என்றோ கூறிவிடமுடியாது. கதை முழுவதும் ஏறத்தாழ இறுதி வாக்கியம் வரை நகைச்சுவை இழையோடினாலும் முடிவில் தங்கிவிடுவதென்னவோ பணியன்றி வேறொன்றறியாத பெரியவர்கள் சந்தித்த/சுமந்த ரணங்கள் மட்டுமே.

இணைப்பு
"கோட்டி – 1"
"கோட்டி - 2"