title


சாதிகள் இல்லையடி



நாம் கற்றுத்தேரும் மதிப்பெண்களை அடிப்படியாகக் கொண்ட கல்வியால் நல்ல Xerox machineகளை அல்லது நடமாடும் Storage deviceகளை உருவாக்க முடியுமேயன்றி, ஒருபோதும் அறிவுசார் சமூகத்தை உண்டாக்கவே முடியாது என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

.

கல்லூரிக்காலங்களில் விடுதியில் கொஞ்சம் நெருங்கிப்பழகிய நண்பர்களுக்கிடையே பொதுப்பிரச்சனையை முன்னிறுத்தி வாக்குவாதங்கள் ஏற்படும். அந்த தனிப்பட்ட உரையாடல்களின் உணர்ச்சிமேலிடும் தருணங்களில், சிலர் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் பிற ஜாதி / மதத்தினர் மீதான வன்மம் வெளிப்பட்டிருக்கிறது. அத்தருணங்களில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் கல்லூரி மறைந்து, அணிந்திருக்கும் பகட்டான ஆடைகள் மறைந்து, அவர்களின் சுயம் தெரியவந்திருக்கிறது. மெத்தப்படித்திருந்தாலும், நுனி நாக்கு ஆங்கிலம் வசப்பட்டாலும், ஐந்திலக்கத்தில் சம்பளம் வாங்கினாலும் கிட்டத்தட்ட அதே மனநிலையை, இப்போது IT துறையிலும் சில நண்பர்களிடம் பார்க்கிறேன்.
.
“படிக்காம உங்கப்பன் ஆத்தாதான் வீணாப்போய்ட்டாங்க நீயாவது படிச்சு முன்னேறு”


“நல்ல படிங்கடா அப்பத்தான் வாழ்க்கைல முன்னேறலாம்”


போன்ற அறிவுரைகளை நம் பள்ளிக்காலங்களிலும் கல்லூரிக்காலங்களிலும் நிச்சயமாய் கடந்து வந்திருப்போம். அந்த சொற்றொடர்களில் உள்ள முன்னேற்றம் எனும் வார்த்தை வெறுமனே சம்பளத்தையோ அல்லது வயிறு சார்ந்த வாழ்க்கையையோ மட்டும் குறிப்பிடுபவை அல்ல. அவை வாழ்க்கை முறையையும் அறிதலையும் சேர்த்ததுதான்.

.

மனிதர்களை அவர்கள் கருத்தை, உணர்வை சமமாய் பார்க்கும் எளிய உண்மையை கற்றுக்கொடுக்கும் அறிவு, ஆரம்ப பாட சாலைகளில் இருந்து பெரும்புகழ் கொண்ட IIT வரை இல்லையென்பது ஆகப்பெரிய சோகம்….


ஜாதி / மதம் / இனம் மறப்போம்; மனிதம் நினைப்போம்..


நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்…- பாரதி.

No comments: