title


புத்தம் சரணம்...

புத்தனை எனக்கும் பிடிக்கும்
"ஆசையே அழிவுக்கு காரணம்" என்றதோடு
”அன்பே அனைத்துக்கும் மூலதனம்” என சொல்லியிருந்தால்

*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
மக்களின் கண்ணீர் நனைந்த அரியணை
அறத்தின் கேடு என அருளியிருந்தால்

*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
பற்றற்று இருப்பது, பெளத்தத்தின் மீதும்
என புரியும்படி விளக்கியிருந்தால்
*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
அதிகாரத்தின் கொடூரமுகம் அனைவரையும்
சமமாய் அரவணைத்திருந்தால்
*
புத்தனை எனக்கும் பிடிக்கும்
அரியணையையும் ஆட்சியையும் விட்டுவந்த
அவன் புகழ் பாடிக்கொண்டே,
அதன் பொருட்டே நிகழும் வன்கொடுமைகளை
தடுத்திருந்தால்
*
புத்தனை எனக்கு மிகவும் பிடிக்கும்;
என்ன, ஒரே வருத்தம்,
அவன் சித்தார்த்தனாகவே இருந்திருக்கலாம்.

No comments: