title


ஆதிரா

பெருமரங்கள் சூழ் அடர்வனத்துள்
பொன்பாதம் பதித்தாள்
ஆதிரா…
.
ஓங்கி வளர்ந்த நெடுமரங்கள்
ஓயாத வண்டுகள் இசை
தடம் மறைக்கும் செடிகொடிகள்
தானாய் திரியும் ஆநிரைகள்
நன்னீர் ஓடைகள்
இன்சுவை பழவகைகள்
அரிதாய்த் தெரியும் கதிரொளி
அகன்று விரிந்த பெரும்பாறை
பார்த்துப் பார்த்து
அதிசயித்தாள் ஆதிரா
.
தேவதை மண் வந்த
பேரதிசயத்தால்
பூத்துக் குலுங்கியது
பெருவனம்..
:)

No comments: