எட்டாவது படிக்கும் மாணவனின் தமிழ் நோட்டில் சில பக்கங்களில் மட்டுமே பாடம் சம்பந்தப்பட்ட குறிப்புகள். அதைத்தவிர பெரும்பாலான பக்கங்களில் இருந்தவை கவிதைகள். அதிலும் பெரும்பாலானவை காதல் கவிதைகள். ஒரு சுப யோக சுபதினத்தில் அந்த தமிழ் நோட்டு அவன் அப்பாவிடம் சிக்கிவிட்டது.. கூடவே அவனும்தான். அப்பா அப்படியொன்றும் மெத்தப்படித்தவரில்லை. ஒரு சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருப்பவர் அவ்வளவுதான். என்றாலும் மகனை அருகில் அழைத்து அவன் கவிதைகளில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டினார். கூடவே எதுகை மோனைகளை பயன்படுத்துவதன் அழகையும். இதுமட்டுமல்ல இதைப்போல பல சம்பவங்களில் அவர் இப்போதிருக்கும் modern அப்பாக்களைப் போலத்தான் நடந்திருக்கிறார். இன்று அவர் மகனும் ஒரு அப்பா.
.
என் வாழ்க்கையில், என் அப்பா அளவுக்கு ஒரு நல்ல அப்பாவாக நான் இருந்தால் போதும். ஆனால் அதுவே ஆகப்பெரிய சவால் :)
.
கருவில் சுமக்கும் அன்னையையும் பிள்ளைகளுடன் சேர்த்து நெஞ்சில் சுமக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்... :)
.
என் வாழ்க்கையில், என் அப்பா அளவுக்கு ஒரு நல்ல அப்பாவாக நான் இருந்தால் போதும். ஆனால் அதுவே ஆகப்பெரிய சவால் :)
.
கருவில் சுமக்கும் அன்னையையும் பிள்ளைகளுடன் சேர்த்து நெஞ்சில் சுமக்கும் அனைத்து அப்பாக்களுக்கும் வாழ்த்துகள்... :)
No comments:
Post a Comment