title


ததாஸ்து

அனைவரையும் வகைப்படுத்தும்
உரிமையை
உங்களுக்கு நீங்களே
தந்துவிட்டீர்கள்
*
யார் நீ?
உன் அப்பன்? தாத்தன் ?
தாத்தனின் தகப்பன்?
அவரின் தந்தை ?
மொழி எது?
எந்த நிலம்?
கேள்விகளால் துளைக்கிறீர்கள்…
பதில்களில் சமாதானம் கொள்ளாமல்
ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை
மீண்டும் ஒருமுறை நிறுவிக்கொள்கிறீர்கள்…
*
அனைத்துக்கும் மூலமாய்
இருந்தது ஒரு
ஆதிக்குரங்கு…
அதற்கென ஒரு வனம்
கனிமரங்கள்…
நீரோடை..
பசும்மரங்கள் சூழ் பெரு நிலம்…
அதுவே
என்னுடையது
உன்னுடையது
அவர்களுடையது
நம்முடையது….
*
ததாஸ்து…
#யாவரும்_கேளிர்

No comments: