title


மெளனத்தின் சாரல்

ஒரு வட்டப்பாதையில்
எதிரெதிர் திசைகளில்
நடந்து கொண்டிருந்தோம் நாம்
*
ஆசிர்வதிக்கப்பட்ட
அரை நொடியில் ...
தீண்டிக்கொண்டோம் பார்வைகளால்
அடக்கமாட்டாமல் உதிர்த்தோம்
சிறு புன்னகையை
வெறுப்பதாய் காட்டிக்கொண்டு
கடந்தோம்
சிறு தலையசைப்பில்
*
பொன் முலாம் பூசிய இம்மாலையில்..
மெல்லிய சாரலுடன்
மணம் வீசும்
மகிழ மரத்தருகே...

நம்முன் இருக்கின்றன
ஆவி பறக்கும்
இரு தேநீர்க் கோப்பைகள்..

அதன் வெம்மையில்
கரைந்துகொண்டிருக்கிறது
நம் மெளனம் !

No comments: