title


பொன் வீடு

வீதி மண்ணின் ஒரு பங்கை
வீடெங்கும் இறைத்து வைத்தாள்…
.
காகிதத்தை துகள்களாக்கி
கடைபோல விரவி வைத்தாள்..
.
கதவு நிலை ஜன்னல்களில்
கணக்கின்றி கிறுக்கி வைத்தாள்
.
காய்கறிகள் தானியங்கள் என
கண்டதெல்லாம் பரப்பி வைத்தாள்…
.
குப்பைகளால் தூசுகளால்
முழு வீட்டை அலங்கரித்தாள்..
.
பச்சை இலை, சருகுகளால்
பாதையொன்றை அமைத்து வைத்தாள்..
.
பொரி கடலை வகைகளையோ
பூக்களாய் தூவி வைத்தாள்
.
பொன்னால் இழைக்கப்பட்டதாய்
மோட்சமடைந்தது
என் வீடு !
:)

No comments: