title


வாழும் மதம்

நான் அணியும் குல்லாவோ
என் முகத்தின் தாடியோ
அன்றி வெறும் பெயரோ
எதேனும் ஒன்றால்
என்னை முகமதியன் என்றீர்கள்….
.
அதிகாலையில் ஸ்ரீசூரணமும்
மாலையில் திருநீரும்
நெற்றியில் துலங்க.....
உங்களுக்கும் குழப்பம்தான் – எதற்கும்
இருக்கட்டும் என ”இந்து” ஆக்கினீர்கள்
.
சிரசில் முள்முடி அணிந்த
தேவகுமாரனை நோக்குந்தோறும்
சிலுவைக்குறியுடும் இயல்பினன் - ஆதலால்
என்னை கிறித்தவ வட்டத்தில்
நிறுத்தினீர்கள்
.
வெறுத்துப்போய் இது எதுவும்
வேண்டாமென துறந்த நாளில்
அதற்கும் ஓர் மதம் உண்டு - என
அதிலே தள்ளினீர்கள்…
.
உங்களுக்குத் தோதான
மார்க்கத்தில் / பாதையில் என்னை
அடைக்குந்தோறும்
இன்னும் இன்னும் வீரியமாய்
வாழ்தலில் / பயணத்தில் கரைகிறேன் நான்…

No comments: