title


மருந்தாகும் ஆயுதம்

தயக்கம் தவிர்த்து
உதிர்க்கப்படும் சில சொற்கள்
தகர்க்கக்கூடும் பலவருடப்
பகையை…
*
நம் அறியாமை இருளின்மீது
வெளிச்சம் பாய்ச்சக் கூடும்
அறிவார்ந்த சில உரையாடல்கள்
*
இமைகளை தூக்கம்
பிடித்திழுக்கும் நள்ளிரவுகளைக் கூட
உற்ற தோழமையுடன்
உரையாடிக் கழி(ளி)க்க முடியும்
*
வெம்மைசூல் பெரும் பகலை…
நெடுந்தொலைவு பயணங்களை..
வெறுமை வழியும் கொடும் நாட்களை
தீராப் பெருந்துயரை
உரையாடல்களின் துணைகொண்டு
உறுதியாய் கடக்க முடியும்
*
இப்பேரண்டம் கண்ட
பெரும் ஆயுதம் எதுவோ….
ஆழ்காயம் ஆற்றும்
அருமருந்தும் அதுவே….
.
சொற்கள் !

No comments: