சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்
என் நேற்றைய மற்றும் நாளைய
நண்பர்கள்...
என்னை குறிவைத்து
எறியப்படுகின்றன
கேலிக்கணைகள்...
குத்திக் கிழித்து
குருதி சிந்தவைக்கும்
கேலிக்கணைமழை...
என்னை மறைத்தபடி
ஏராள ஏமாற்றங்கள்
எண்ண விடுவதில்லை
எதைப்பற்றியும்...
என்னை காட்சிப்பொருளாக்கி
கழித்திடும் நண்பர்களே
நான் மீண்டுவரும் நாள்
வெகு தொலைவிலில்லை...
அதுவரை நன்கு சிரித்துக்கொள்ளுங்கள்
அதன்பின் அவஸ்த்தைகளும்
ஆச்சர்யங்களும் மட்டுமே
உங்களுக்கு...
அழுகையும் வலியும்
வேதனையும் புறக்கணிப்பும்
மரணம் போன்றவை...
இன்று நான்...
நாளை நீ...!
1 comment:
அழுகையும் வலியும்
வேதனையும் புறக்கணிப்பும்
மரணம் போன்றவை...
இன்று நான்...
நாளை நீ...!
பதிவு
echarikkirathu kavithai..
Post a Comment