title


வேண்டுதல்

எவ்வளவு தூரம்
கடந்தாலும் வளர்ந்தாலும்
தொடர்கின்றன நினைவுகள்
நிழலைப் போல...

ஆனால்...
நிழலைப் போலல்ல நினைவுகள்
தொடர்கின்றன இரவிலும்...

பகலும் இரவும்
முழுவதும் சூழ்ந்து
இயக்கம் மறக்கடிக்கின்றன
இரக்கமற்று...

பேச்சொலிகளாலும் சிரிப்பினாலும்
இன்னபிற ஆசை
கனவுகளாலும் நிரம்பியிருந்ததது
கடந்துபோன காலம்...

ஒன்றுமேயில்லாத
நிகழ்காலம் தன்னிச்சையாய்
கடந்து கொண்டிருக்கிறது
வெறுமையை சுமந்துகொண்டு...

வறண்டு வெடித்த வெம்பரப்பில்
விழும் துளி நீர்போல
எழும் சிறு மகிழ்வும்
உறிஞ்சப்படும் உடனடியாக...

உறக்கமோ மரணமோ
இல்லை வேறுஏதாவதோ
அமைதி வேண்டுமெனக்கு...

கூடவே
நிறைய மறதியும்...

1 comment:

Anonymous said...

don't seek it outside or from others...its in u... mahaans are telling...keep searching...one day or other u will find it out.