" உன் நெனப்பா இருக்குப்பா "
ஒற்றை வாக்கியத்தில் வயதறுத்து
உயிரறுத்து அழவைப்பாள் அம்மா !
"கடல் மண், வாடிய பூ, அவள் கைபட்ட காகிதம்"
என குப்பைகளாலே அறையை
தாஜ்மஹால் ஆக்குவாள் காதலி !
கற்றுத் தரும் குருவுமாகி
கற்றுக் கொள்ளும் சேயுமாகி
களிப்புத் தருவாள் மகள் !
ஒட்டு மொத்த நீசத்தனம்
புரிந்த பின்னரும் அன்னையாகி
தலைதடவுவாள் தோழி !
தாய்மை என்றும்
தோழமை என்றும்
காதல் என்றும்
நகல் எடுத்தாலும்
என்றும் எதிலும் அழியாத
அசல் " அன்பு " !
1 comment:
எதிலும் அழியாத
அசல் " அன்பு " !
athu engea kidaikkuthu solungkalen
i am also in dire need.
Post a Comment