title


தரிசனம்


மூலவர் திரையால்

மறைக்கப்பட்டிருந்த போதிலும்.....


கருவறை முன்பு

பறந்து கொண்டிருந்தன

வெண்புறாக்கள் !

தூண்களை நாவால்

நக்கி ஆடிக்கொண்டிருந்தன

குழந்தைகள் !



திரைச்சீலையை கலைத்து

தீண்டிப் போனது

தென்றல் !


தள்ளாத வயதினரை

தாங்கி அமர வைக்கும்

பல பேர் !


எது மறைக்கப்பட்டிருந்ததோ

அதுவே மறையாததுவும் ஆகும் !

2 comments:

Anonymous said...

நீங்கள் முந்திகொள்ளுங்கள் ஞாபகப்படுத்துலை...அவர்கள் மறந்து விடுவார்கள் அவளை கேட்ப்பதை..

Anonymous said...

அதுதான் சத்தியம்..


எல்லாம் காணாமல் போனலும் மறையாமல் உறைந்திருப்பது..


தத்துவைத்தை அடக்கிவிட்டீர்...