மூலவர் திரையால்
மறைக்கப்பட்டிருந்த போதிலும்.....
கருவறை முன்பு
பறந்து கொண்டிருந்தன
வெண்புறாக்கள் !
தூண்களை நாவால்
நக்கி ஆடிக்கொண்டிருந்தன
குழந்தைகள் !
திரைச்சீலையை கலைத்து
தீண்டிப் போனது
தென்றல் !
தள்ளாத வயதினரை
தாங்கி அமர வைக்கும்
பல பேர் !
எது மறைக்கப்பட்டிருந்ததோ
அதுவே மறையாததுவும் ஆகும் !
2 comments:
நீங்கள் முந்திகொள்ளுங்கள் ஞாபகப்படுத்துலை...அவர்கள் மறந்து விடுவார்கள் அவளை கேட்ப்பதை..
அதுதான் சத்தியம்..
எல்லாம் காணாமல் போனலும் மறையாமல் உறைந்திருப்பது..
தத்துவைத்தை அடக்கிவிட்டீர்...
Post a Comment