இன்னும் தீர்ந்துவிடவில்லை
என் வாழ்க்கை
சகியே மீதமிருக்கின்றன
நான் கடக்கவேண்டிய தொலைவுகள்...
கண்ணீருடன் வந்தாலும்
புன்னகை ஒன்றும்
நீர்த்துப்போகவில்லை...
உன் துணை இழந்தபோதும்
தொலைந்து போகவில்லை
பாதைகள்...
உன் வாசம் இல்லாதபோதும்
ஆக்சிஜனோடு அனுசரிக்க
கற்றுவிட்டேன்...
உன்சாயல் போனபின்னும்
மழையும் வானும்
அழகாய்த்தான் உள்ளன...
உதறிய உன்னால்
சிதறிய நெஞ்சம்
சீரடையும் ஓர்நாள்...
இறுதியாய் ஒன்று
தோழியே....
என்னுடையது இழப்பு...
உன்னுடையது பேரிழப்பு...
2 comments:
Hahaaa.. edho flashback irka madhiri irku.. oru naal tortoise yethi veppom...
உதறிய உன்னால்
சிதறிய நெஞ்சம்
சீரடையும் ஓர்நாள்...
kandippaaka kaalam marunthaakum..
சகியே மீதமிருக்கின்றன
நான் கடக்கவேண்டிய தொலைவுகள்
saathikalaam...
Post a Comment