title


அதே மழை நாள்

சுழன்று கொண்டேயிருக்கின்றது
எப்போதும் போல பூமி...

சாலைகளில் மெதுவாய்
எறும்பைப் போல
ஊர்கிறது வெயில்

துவங்கி விட்டது
மற்றுமொரு நாள்..

உடல் உணர்கிறது
யாவையும்....

மனம் நங்கூரமடித்து
நிற்கிறது...

நீ விட்டுப் போன
அதே மழை நாளில்...

1 comment:

Anonymous said...

in failure only,the feelings are so live.