title


மழை

ஆயிரம் யானை
ஊர்வலம் போல
மேகம் நடக்கிறது
வானில் மேகம் நடக்கிறது...

கோடி மேளங்கள்
கூடி இசைத்திடும்
ஒலியும் கேட்கிறது
இடி ஒலியும் கேட்கிறது...

வெள்ளி மலையொன்று
உருகி வழிகின்ற
ஒளியும் தெரிகிறது
விண்ணில் மின்னல் தெறிக்கிறது...

கண்ணீர் திறக்கும்
ஆறுதல் மொழியாய்
காற்றும் வருகிறது
மேகம் மழையாய் மாறியது...

காய்ந்து கிடக்கின்ற
நிலமெல்லாம் மழையை
வாரி அணைக்கிறது
நீராடை உடுத்தியது...










1 comment:

Anonymous said...

it is nice also it is so rythematically...i enjoyed....