ஆயிரம் யானை
ஊர்வலம் போல
மேகம் நடக்கிறது
வானில் மேகம் நடக்கிறது...
கோடி மேளங்கள்
கூடி இசைத்திடும்
ஒலியும் கேட்கிறது
இடி ஒலியும் கேட்கிறது...
வெள்ளி மலையொன்று
உருகி வழிகின்ற
ஒளியும் தெரிகிறது
விண்ணில் மின்னல் தெறிக்கிறது...
கண்ணீர் திறக்கும்
ஆறுதல் மொழியாய்
காற்றும் வருகிறது
மேகம் மழையாய் மாறியது...
காய்ந்து கிடக்கின்ற
நிலமெல்லாம் மழையை
வாரி அணைக்கிறது
நீராடை உடுத்தியது...
1 comment:
it is nice also it is so rythematically...i enjoyed....
Post a Comment