title


ஒரு முட்டாளின் மூன்று கவிதைகள்


1.
உயிர் கசிந்து எழுதப்படும்
ஒவ்வொரு காதல் கவிதையின்
முடிவிலும் அயர்ச்சியுடன்
எண்ணிக்கொள்கிறேன்
கவிதை புரியாத சிலரையும்
என் காதலே புரியாத
உன்னையும்…

2.
நான் எண்ண பேசினாலும்
அதை எண்ணி எண்ணி
சிரிப்பாய்…
அப்படியே கடந்து போனாய்
நான் காதல் சொன்ன
கணத்தையும்

3.
தூக்கம் போர்வையாகி
நகரையே மூடிப்போன
பின்னிரவுப் பொழுதுகளில்
உன் நினைவைப்
போர்த்தி விழித்திருக்கிறேன்….
எல்லாவற்றையும்
தன்னுள் கரைத்து
கரைந்து கொண்டிருக்கிறது
காலம்

No comments: