title


மழைக்காலம்


பெருமழை…
நனைந்தவன் ஏறினான்
பேருந்திலும் மழை

*

பின்மதிய வெயில்
குடையாய் வந்தது
மழை

*

மழை அம்பு
உடம்பெங்கும்
நீர்க்குருதி

*

வெகு அமைதியாய்
இருந்த இரவுக்கு
இசை தானமிட்டது
மழை

No comments: