title


சமாதி


நஞ்செய் புஞ்செய்
பாகுபாடில்லாமல்
விளைந்து நிற்கின்றன
எல்லா நிலங்களும்…

மாதம் மும்மாரி
மழைப்பொழிவு தேவையில்லை
காலம் பார்த்து களை பிடுங்கும்
கட்டாயம் ஏதுமில்லை
பூச்சிகொல்லி உரம் தெளித்து
பக்குவப்படுத்தல் பழைய கதை

மகசூல் அறுவடை
எல்லாம் மறந்துபோய்
வெறும் வீடுகளாய்
விளைந்து நிற்கின்றன
“விலை” நிலங்கள்

காய்கறிபோல் கான்கிரீட்டை
உண்ணமுடியாது எனும்
உண்மையை சுமந்து கொண்டு…

No comments: