title


1921• September 11, 2013


ஆசைப் பிள்ளைகளின் அழுகுரல்,
அன்பு மனைவியின் கண்ணீர்,
ஒரு வேளை பட்டினிக்கே
உயிர் போக்கும் கும்பி
மானத்தை ஆடையிலும்
மாண்பை பணத்திலும்
அளவிடும் ஆறறிவு
காக்கை கூட்டம்
இப்படி எத்தனை எத்தனையோ
நியாயங்கள் ஒவ்வொருவருக்கும்…
ஊரோடு ஒத்து வாழ….

அப்படியே அவனுக்கும் ஆனாலும்

எந்நிலையிலும் சமரசம் மறுத்தவன்..
அறிவாசான் ஞானசூரியன்
மூத்தகுடியின் மகாக்கவிஞன்
மரணத்திலும் பிறந்தவன்
மகாக்கவி பாரதி நினைவு தினம் இன்று (September 11, 1921).

பாரதி போற்றுவோம் !
———————
ஜாதி மதங்களைப் பாரோம் -
உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -
அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே.

No comments: