title


வட்டம்


ஏதோ ஒரு கணத்தில்
ஒருத்தியின் மென் புன்னகை
என் தூக்கத்தை கெடுக்கவல்லது
இப்போதும்

இன்னும் கூட
சுகந்தத்துடன் தடவிப்போகும்
ஏதாவதொரு தாவணியால்
என் மனதில் பூகம்பம்
விளையக்கூடும்

முன் நெற்றி முடிகளை
புறங்கையால் ஒதுக்கி
எவளாவது வீசும் கள்ளப்பார்வை
இன்றும் நெஞ்சில் தீ மூட்டுகிறது

நியாய தர்மங்கள்
விதிமுறைகள் தர்க்கங்கள்
எல்லைகள் என
எதற்குள்ளும் அடங்காமல்
வாதிக்கிறது
என் வாழ்க்கை !

No comments: