title


முள்

பிதுங்கி வழியும் பேருந்தில்
வியர்வை ஆற்றின் மத்தியிலும்

அனலடிக்கும் காற்றில்
நெடுந்தூரம் நடக்கும் போதும்

ஏன்
சமயங்களில் மயான வெளிகளில் கூட

ஒரு குழந்தை
பொம்மையை சுமப்பது போல...

முடியாவிட்டாலும்
சுமந்து கொண்டே திரிகிறேன்

தன்னைத் தான் மட்டுமே
அழிக்கவல்ல “பஸ்மாசுரன்”

காமம்

No comments: