அன்னை கூந்தலில்
அன்பின் வடிவாய்...
ஆண்டவனுக்கு சூட்டினால்
கருணை உருவாய்...
காதலி கூந்தலில்
ஈர்ப்பின் சிகரமாய்...
விலைமாது சூடுகையில்
அவள்மன வெறுமையாய்...
மணமக்கள் கழுத்தில்
இரட்டிப்பு பூரிப்பாய்...
இறந்தவர் உடலில்
கசப்பாய் , சோகமாய்...
.
.
.
பாவம் பூக்களை
செடிகளிலேயே விட்டுவிடுங்கள்
பூக்கள் இருந்துவிட்டு போகட்டும்
பூக்களாகவே !
1 comment:
cha....poova pathi ivalo vishayam yaarum yosichirukka maatanga.......Great work!!!!
Post a Comment