title


வலி

மனதின் எங்கோ ஓர்
ஓரத்தில் மெல்லத்
தலையெடுக்கும் வலி
கண்ணியாய் பிறப்பெடுத்து
வலிகள் அணிவகுத்து
வருத்தவலை பின்னலாகும் !

வலி களையும்
வழி அடைய
வருத்தங்களைத்
திருத்தமாக்க
நிந்தித்து சிந்தித்து
நிர்மூலமாகையில்...
முற்சொன்ன வலைப்பின்னல்
மென்மேலும் பெருகி நிற்கும்

வலிகளும் வருத்தங்களும்
மாறி மாறி அரங்கேற
மன மன்றம் எல்லாமும்
ரணகளம் உண்டாகும்
எண்ணங்கள் குழம்பலாகும்
எல்லாமும் மாறிப் போகும்
கண்ணீர் ஆறும் கொஞ்ச
காலத்தில் வற்றலாகும்

காலங்கள் கடக்க
பழகிப்போன வருத்தமும்
விலகிப்போன வலிகளும்
ரணப்பட்ட மனவீட்டை
சமன்படுத்தி விட்டுப் போகும்

மட்டற்ற மகிழ்ச்சி மழை
மனம் முழுதும் நனைக்கையில்
ஒட்டாமல் ஒரு குரல்
உன் காதில் ஓதிப்போகும்

வாழ்வின் இயல்பே
வலிகளும் வருத்தமுமே
உண்மைதான்...

உப்பில்லா பண்டத்தால்
யாதொன்றும் சுவையில்லை !

No comments: