title


மீட்பர்

யுகங்களைக் கடந்த
பெருங்கவிஞன்

தான் எழுதிய
ஒரே கவிதையின்
இறுதிச் சொல்லுக்காகக்
காத்திருந்த அந்நாளில்தான்

பெருங்கருணை கொண்ட
தேவன்
தூக்கத்தில் சிரிக்க வைத்தான்
குழந்தைகளை

No comments: