என்னைத் தாண்டி
யாருக்கோதான் அனுப்பினாய்
உன் புன்னகையை
புல்லுக்கும் பொசிந்தது
புண்ணியம்
*
போதும்…
இனியொருமுறை
என் அருகே வராதே…
ஒரு சொல் கூட
என்னிடம் பேசாதே…
சம்பிரதாயத்தின் பொருட்டு கூட
புன்னகைக்காதே
கண்பார்வை ஜாடைகள்
என எதுவும் வேண்டாம்
தாங்க முடிவதில்லை
என்னால்….
*
இதுக்கு..
“போதும் இனி கவிதை எழுதாதே” ன்னு எவரேனும் பின்னூட்டமிட்டால், இதே ரீதியில் ஆயிரம் கவிதைகள் (அவர்களுக்கு மட்டும்) அனுப்பப்படும்…. ஜாக்கிரதை….
***
இருள் ஆளும்
நீண்ட இரவின்
முற்றுப்பெறா பாதையில்
உரையாடல்களே வழியாக
நீயும் நானும்…
எது சொன்னாலும்
நீ சிரிக்க
உயிர்த்தெழுந்தன விண்மீன்கள்
*
உரையாடல்களை முடிக்க
நான் முற்றுப்புள்ளி
வைப்பேன்…
நீ முத்தப்புள்ளியை…
*
உன் கடிதத்தின்
எல்லா வரிகளையும்
அதன் சொற்களையும்
அவற்றின் எழுத்துக்களையும்
ஏன் குறியீடுகளையும் கூட
காதல் கொண்டே நிரப்புகிறாய்…
பெருகியோடும் காதல்
புரியாது தவித்திருந்தேன்
காதலை அர்த்தப்படுத்த
இடைவெளிகளாய் இட்டாய்
முத்தங்களை…
***
யாருக்கோதான் அனுப்பினாய்
உன் புன்னகையை
புல்லுக்கும் பொசிந்தது
புண்ணியம்
*
போதும்…
இனியொருமுறை
என் அருகே வராதே…
ஒரு சொல் கூட
என்னிடம் பேசாதே…
சம்பிரதாயத்தின் பொருட்டு கூட
புன்னகைக்காதே
கண்பார்வை ஜாடைகள்
என எதுவும் வேண்டாம்
தாங்க முடிவதில்லை
என்னால்….
*
இதுக்கு..
“போதும் இனி கவிதை எழுதாதே” ன்னு எவரேனும் பின்னூட்டமிட்டால், இதே ரீதியில் ஆயிரம் கவிதைகள் (அவர்களுக்கு மட்டும்) அனுப்பப்படும்…. ஜாக்கிரதை….
***
இருள் ஆளும்
நீண்ட இரவின்
முற்றுப்பெறா பாதையில்
உரையாடல்களே வழியாக
நீயும் நானும்…
எது சொன்னாலும்
நீ சிரிக்க
உயிர்த்தெழுந்தன விண்மீன்கள்
*
உரையாடல்களை முடிக்க
நான் முற்றுப்புள்ளி
வைப்பேன்…
நீ முத்தப்புள்ளியை…
*
உன் கடிதத்தின்
எல்லா வரிகளையும்
அதன் சொற்களையும்
அவற்றின் எழுத்துக்களையும்
ஏன் குறியீடுகளையும் கூட
காதல் கொண்டே நிரப்புகிறாய்…
பெருகியோடும் காதல்
புரியாது தவித்திருந்தேன்
காதலை அர்த்தப்படுத்த
இடைவெளிகளாய் இட்டாய்
முத்தங்களை…
***
No comments:
Post a Comment