title


கவிதைகள் - பிப்ரவரி 2014

மரண தண்டனை

மிகப்பெரிய சதிவலையில்
எதிர்பாராது சிக்குபவனை
நாம் சட்டத்தின் பெயரால்
தூக்கிலிடலாம்….

எவ்வித திட்டமிடலுமின்றி
அறியாமல் தவறிழைத்தவனையும்
நாம் சமன்பாடு கருதி
சாகடிக்கலாம்…

வெஞ்சினத்தால் முடிவெடுத்து
கொடும் கொலை புரிந்தவனையும்
நாம் மனிதத்தின் பெயரால்
மன்னித்து அருளலாம்…


செய்தவன்
மனிதனா, இல்லையா
என்பதல்ல பிரச்சனை

நாம் யார் என்பதுதான்….

யாசகம்

குளிரேறிய அறையிலும்
உறங்கவிடாமல் தகிக்கும்
வெம்மையை மாற்றவும்

வெகு சொகுசான பஞ்சணையில்
விரவி நிற்கும்
நினைவு முட்களைக் களையவும்

ஆகக் கசப்பேறிய
துரோகத்தின் இரவை
குறைந்தபட்ச வலியுடன் கடக்கவும்

தானமிடுங்கள் எவரேனும்….

அன்னையின் அருகாமையை
தூய காதலின் அரவணைப்பை
ஒரு பறவையின் சிறகசைப்பை
ஒரு குழந்தையின் முத்தத்தை
குறைந்த பட்சம்
கபடமற்ற புன்னகையை


தானமிடுங்கள் எவரேனும்….

ஒப்பாரி

அந்தப்புர மஞ்சத்தில்
முதல் அபலையின்
கண்ணீர் விழுந்த நாளில்
பிறந்தது

பல்லாயிர வருட
பெருமை பேசும்
ராஜ்ஜியங்களின் அஸ்தமனம்

அந்நாளில்தான்
ஆதி சூதனின் மனம்
கருவுற்றது
முதல் சொல்லை...

No comments: