நண்பர்களின் உயிர் போக்கும் ரீதியான எச்சரிக்கைகள், ”இதெல்லாம் ஒரு பொழப்பு” ரீதியான நக்கல்கள், ”சொன்னா கேளு மாப்ள” என்பதான அறிவுரைகள், கூடவே ”உனக்குப் போயா இந்த நிலைமை” எனும்படி அனுதாபங்கள் இவையெல்லாவற்றையும் தாண்டி நேற்றிரவு கோவை சத்யம் சினிமாஸில் ”பில்லா II” படம் பார்த்தேன்.
ஈழத்தமிழர்கள் என
காட்டப்படும் எல்லோருமே “இந்திய” தமிழில் பேசுவது, “ஒப்புக்கு சப்பாணி” லாஜிக் கூட இல்லாமல் எல்லா காரியங்களையும் பில்லா அசால்ட்டாக செய்வது, படம் பார்க்க வந்த நம்மைத் தவிர எல்லோரையும் சுட்டோ, குத்தியோ கொன்றுகொண்டேஏஏஏஏஏஏ இருப்பது, பெரும்பாலான காட்சிகளில் தெறிக்கும் ரத்தம் நம்மீதும் படுவது போன்ற உணர்வைத்தருவது என படத்தில் நிறைய “மைனஸ்”கள் இருந்தாலும் எனக்கு படம் பிடித்தது
(தம்பி நாங்கெல்லாம் “சகுனி” யவே தூக்கிப்போட்டு தூர்வாருனவிங்க… நீங்கென்னம்மோ இதுக்கு
போயி அலட்டிகிட்டு).
யுவன் ஷங்கர் ராஜாவின்
அற்புதமான இசை, இரா.முருகன் அவர்களின் “ஷார்ப்” வசனங்கள், ஒளிப்பதிவு, எல்லாவற்றுக்கும்
மேலாக “அஜித்”தின் டான் ”Appearance” என என்னைக் கவர்ந்த விசயங்கள் நிறைய. எப்படி “சைக்கோ”
கேரக்டர்க்கு என ஒரு ”தனுஷ்” இருக்கிறாரோ, “மைக்” என்றாலே “மோகன்”தானோ, பசு மாட்டில்
பால் கறக்க ஒரு (கி)ராமராஜனோ கேப்டனுக்கு ஒரு போலீஸ் வேசமோ, அதைப்போலவேதான் அஜித்துக்கு
இந்த “டான்” கேரக்டர்களும் அசால்ட்டாக “ஸ்கோர்” செய்கிறார். (ஆனால் இந்தப் படத்தில்
அஜித்துக்கு நடிக்க கிடைத்த வாய்ப்புகளை விட ”நடக்க” கிடைத்த வாய்ப்புகளே அதிகம்).
என்னைப் பொருத்தமட்டில்
படம் “ஆகா, ஓஹோ” வெல்லாம் இல்லை. அதைப்போலவே ”அடச்சீ” ரகமுமில்லை. கொஞ்சம் ஓவர் வன்முறை
என்றாலும் கூட தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.
No comments:
Post a Comment