எனக்கும்
என் அலுவலக நண்பனொருவனுக்கும் சமீப காலங்களில் “இளையராஜா” vs “ஹாரிஸ் ஜெயராஜ்” விவாதம் நடைபெறுவதுண்டு. அவனுக்கு ”இசைனா அது ஹாரிஸ் இசைதான்… பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கும்”. எனக்கோ ராஜா “இளைய” ராஜா அல்ல ”இசை”யராஜா; மட்டுமல்ல
இசைக்கெல்லாம்
ராஜா. அவனும் சரி நானும் சரி எங்கள் நிலையிலிருந்து மாறியதில்லை.
சென்றவாரம் எதேச்சையாக அவனை பார்க்கப்போனேன்…
“என்னங்க… இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கறமாதிரி தெரியுது” என்றான்
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லப்பா; சும்மாதான்”
”இல்ல…ரொம்ப சந்தோஷமா இருந்தா உடனே இளையராஜா பாட்டா கேட்பீங்களே..” என நக்கலடித்தான்.
“அதுதான் தப்பு… நான் சந்தோஷமா இருந்தா கேட்க நெறையபேரு இருக்காங்க. யுவன், ரெஹ்மான், உங்காளு (ஹாரிஸ் ஜெயராஜ்) இப்படி. ஆனா மனசுல கஷ்டம்ன்னு வந்தா கேட்கறது எங்காளு (இளையராஜா) பாட்டதான்” – இதை எந்தவித யோசனையும் இல்லாமல் உடனே சொல்லிவிட்டேன்.
பின்னர், யோசிக்கும்போதுதான் நான் சொன்னது எவ்வளவு உண்மை என்பது புரிகிறது. இதுவரை நான் ராஜா பாடல்களை தேடித்தேடி கேட்டது மனம் முழுக்க வருத்தங்களுடன்தான். அப்போதெல்லாம் எனக்கே எனக்காக அவர் பாடல்கள் இருப்பதான பிரம்மை தோன்றுவதுண்டு. ஆயிரம் காதல் பாடல்கள் தராத நெருக்கத்தை ஒரு “உன்குத்தமா” தந்துவிடுகிறது. அதிலும் “how to name it” என்ற இசைத்தொகுப்பில் உள்ள “How to name it” என்ற இசைக்கோர்வை என் all-time favorite. வார்த்தைகள் ஏதுமின்றி வெறும் இசையாலேயே மனதுடன் பேசியிருப்பார் ராஜா. அந்த இசைக்கோர்வை கூட மனதின் வலியைப் பேசுவதுதான்.
வேறென்ன… மகிழ்ச்சியில் பாராட்டும், கைகுலுக்கும் கரங்களைவிட வருத்தத்தில் விழிதுடைக்கும்
கை எப்போதும் உயர்ந்த்து. எனக்கு அந்த “கை” ”இளையராஜா” வின் கை.
No comments:
Post a Comment