title


ரெண்டு லட்டு

சில நாட்களுக்கு முன் எனக்கும் கார்த்திக்கும் ஒரு சின்ன சண்டை... சண்டையின் உச்சத்தில் கோபமடைந்து நான் அவனிடம் “டூ” என சத்தமாக சொல்லிவிட்டு திரும்பி நடந்தேன்... “அப்பா, அப்பா” என கூப்பிட்டவாறே பின்னால் வந்தான் கார்த்திக்.

எனக்கு ரொம்ப சந்தோசம். சரி நாம டூ விட்டா பையனால தாங்க முடியல என எண்ணியவாறே (கொஞ்சம் விளையாட்டு காட்ட) படுக்கையில் வந்து விழுந்தேன். அவனும் சளைக்காமல் பின்தொடந்து வந்து என்னை எழுப்பினான். எனக்கு இன்னும் சந்தோசமாகிவிட்டது. திருப்தியுடன் ”பழம்” விடலாம் என எழுந்தவுடன் கார்த்திக் சொன்னான்

“அப்பா, ரெண்டு டூ”

No comments: