title


இசைத்தமிழ்

சென்ற 14-12-2012 வெள்ளி இரவு 10 மணிக்கு ஒரு வேண்டுதலை நிறைவேற்ற திருத்தணிக்கு சென்றோம். எங்கள் குடும்பத்தில் ஒரு 15 பேர் வேனில் கிளம்பினோம். 11 மணி வரை எல்லோரும் “காஞ்சனா” படம் பார்த்தார்கள். பின்பு அனைவரும் தூங்கிவிட நானும் டிரைவர் அண்ணாவும் மட்டும் விழித்திருந்தோம். கையுடன் கொண்டு போயிருந்த பழைய பாடல்களடங்கிய Pen Drive விலிருந்து பாடல்களை கேட்கத்துவங்கினோம்.

மொத்த வண்டியிலேயே Driver Cabinல் மட்டும் இருக்கும் மெல்லிய வெளிச்சம், எதிர் திசை வண்டிகளின் உபயத்தில் சமயங்களில் பளிச்சிடும் ஒளி, நள்ளிரவின் அற்புதத்தை பறைசாற்றும் அமைதி, தேர்ந்த ரசனையுடன் பாடல்களை முணுமுணுக்கும் Driver அண்ணா எல்லாவற்றுக்கும் மேலாக காலத்தை வென்ற அற்புதமான பாடல்கள் என அதிகாலை 3 மணி வரை வெகு ஜோராய் இருந்தது.

எம்.எஸ்.வி, கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், ஸ்ரீதர் என தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களை நினைவூட்டின ஒவ்வொரு பாடலும். அதிகாரவர்க்கத்தின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் எம்.ஜி.ஆர். பாடல்கள், ஆண்டவனையே அழ வைத்துவிடும் சிவாஜி பாடல்கள், காதல் ரசம் பிழிந்தெடுக்கும் ஜெமினி கணேசன் பாடல்கள் என எல்லாம் கலந்துகட்டிய ஒரு ரகளையான கலவை.

மொத்தத்தில் அது ஒரு அற்புத இரவு !

2 comments:

VV said...
This comment has been removed by the author.
காளீஸ்வரன் said...

அப்படியே ஆகட்டும் வெங்கடேஷ்... :)