title


கால் முளைத்த கதைகள்

கதை சொல்லக் கேட்டு
நச்சரித்த மகனோ
சடுதியில் உறங்கிப்போக

மனம் போன போக்கில்
கண்ணிகள் வைத்து
கதை வளர்த்த அப்பனும்
பாதியில் தூங்கிவிட

சம்பந்தமேயில்லாமல் போடப்பட்ட
முடிச்சுகளை அவிழ்க்கவும்
முடிவைத் தேடியும்
தனியே அலைந்து
திரிகின்றன கதைகள் !

No comments: