title


பிம்பம்

எனக்கான நியாயங்களை…
நான் நிறுவும் உண்மைகளை…
எல்லா தர்க்கங்களிலும்
என்னுடைய வாதங்களை…
எனக்கே எனக்கென
நான் விரும்பும் எதையும்…

நானே மறுக்கிறேன்

வேறெவனைக் காட்டிலும்
என்னை சமாளிப்பதுதான்
என்னுடைய வலி !

இறைவா என்னிடமிருந்து
என்னைக் காப்பாற்று…
நண்பனோ எதிரியோ
நாளை பார்க்கலாம் !

No comments: