title


விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது வழங்கும் விழா 2012


கடந்த 22-12-2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவை R.S.புரம் மாநகராட்சி கலை அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது வழங்கும் விழாவுக்கு (http://www.jeyamohan.in/?p=32837) சென்றிருந்தேன். அன்றைய விழா உண்மையிலேயே சிறப்பானது. ஏனென்றால் அன்றைய விழாவுக்கு இரண்டு நாயகர்கள். ஒருவர் விருதினை பெற்றுக்கொள்ளும் கவிஞர் தேவ தேவன், மற்றொருவர் விருதினை வழங்கிய  ராகதேவன் இளையராஜா.

வாழ்த்துரை வழங்கிய திரு.மோகனரங்கன், திரு.சுகா, திரு.ராஜகோபாலன், திரு. கல்பற்றா நாராயணன் என அனைவரின் பேச்சுமே நன்றாக இருந்தது. என்றாலும் நான் வெகுவாக ரசித்தது  திரு.நாஞ்சில் நாடன், திரு.ஜெயமோகன் மற்றும் திரு.இளையராஜா அவர்களின் வாழ்த்துரைகளை. இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். திரு.கல்பற்றா நாராயணன் அவர்களின் மலையாள பேச்சை திரு.கே.பி.வினோத் அவர்கள் மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்புக்கு அவசியமேயில்லாதவண்ணம் மலையாளம் பெரும்பாலும் புரிந்தது [மலையாளம் இவ்வளவு ஈஸின்னு கல்யாணத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே :(].

இளையராஜா ஏறத்தாழ 9 நிமிடங்கள் மட்டுமே பேசினார். நல்ல நிறைவான உரை. அதிலும் பேச்சு, எழுத்து, கவிதை, கதை என எல்லாவற்றையுமே அவர் இசையாக சொன்னது அருமை.



ஜெயமோகன் சொன்னதுதான் மிக அற்புதம் "இன்னும் 500 ஆண்டுகள் கழித்தும் நம் காலத்தின் 10 வரிகள் நிலைத்து நிற்குமானால் அது இந்த (தேவ தேவன்) எளிய மனிதன் எழுதிய வரிகளாகத்தான் இருக்கும்" என்றார்.



ஏறத்தாழ 9 மணிக்கு முடிவடைந்த விழா மிகவும் அற்புதமானது.

எல்லாரும் சிலாகித்த அந்தக் கவிதையை சொல்லி நிறைவு செய்வதுதான் சிறப்பு. அந்த அற்புதக் கவிதை இதோ 
நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த அக்கணமே பறவை.





















No comments: