title


ததாஸ்த்து

1.
என்னுடைய கனவுகளை
தின்னப் பிறந்தவள்
நீ!

உன்னுடைய கனவுகளை
தினமும் செமிப்பவன்
நான்!

இருக்கட்டும்…

இருவரும் பசியாறினால்
கூடப் போதும்…
குறைந்தபட்சம்!
******
2.
உலகின்
ஆகப்பெரிய வலியை

ஒட்டுமொத்த
துக்கத்தை

மாறி மாறி
பரிசளித்துக்கொண்டே
இருக்கிறோம் நாம்…

போகட்டும் சகியே…
சிலுவை சுமக்காத ஏசு
கடவுளே இல்லை…

No comments: