இன்று கார்த்திக்கை
எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள “PARK”க்கிற்கு கூட்டிட்டு போனோம். பையன் “சறுக்கி விளையாடும்”
விளையாட்டை மட்டுமே ஒரு முக்கால் மணி நேரம் விளையாண்டான். அதுக்கு நான் ஏன் மூக்கால
அழறேன்னு கேட்குறீங்களா…சொல்லுறேன் மக்களே சொல்லுறேன்….
அது ஒரு 10 படிகள்
கொண்ட சறுக்கு விளையாட்டு. நான் கார்த்திக்கை தூக்கிக்கொண்டு பத்து படியையும் ஒவ்வொன்னா
ஒவ்வொன்னா ஏறி அவரை சறுக்குமிடத்தில் ”Drop” செஞ்சிட்டு அவன் சறுக்கி முடிச்சு திரும்பி
வரதுக்குள்ளாற நாலஞ்சு படியா தாண்டி தாண்டி அடுத்த ரவுண்டுக்கு ரெடியா இருக்கணும்.
இப்படியே அவன் 45 நிமிடம் சறுக்க சறுக்க நான் தாவி ஓடி உருண்டு பொரண்டு ஒரு வழி ஆயிட்டேன்
போங்க. என்ன ஒரு சின்ன வருத்தம் கஷ்ட்டப்பட்டு சேத்த ஒடம்பு எப்படியும் ஒரு 100 கிராமாவது
கொறஞ்சிருக்கும். பரவாயில்ல நாளக்கி ஞாயித்துக்கெழம தான ஒடம்ப தேத்திடுவோம்.
No comments:
Post a Comment