வாழ்க்கைப் புத்தகத்தின்
தீரா பக்கங்களில்
காதல் சுமந்த
பக்கங்கள் மட்டும்தான்
“கலர்” பக்கங்கள் !
**
மாபெரும் கோவிலில்
ஆயிரம் தெய்வங்கள்
சூழ்ந்திருந்தாலும்
மூலவருக்கு எப்போதும்
முதல் மரியாதைதான் !
அப்படியே
பேருந்து நிறுத்தத்தின்
கன்னியர்கள் கூட்டத்தில் நீ !
**
நகம் கொறிக்கும் போதெல்லாம்
“கெட்ட பழக்கம்” என
செல்லமாய்க் கோபித்து
வலிக்காமல் கொட்டுகிறாய்
அடடா
நகம் கொறிப்பதுதான்
எவ்வளவு “நல்ல″ பழக்கம் !
No comments:
Post a Comment