பேப்பரை மிதித்தால்
"சரஸ்வதி" சாமி
தொட்டுக் கும்பிடு !
சாப்பாட்டை
இறைத்தால்
அன்னலட்சுமி
கோபித்துக்கொள்ளும்
!
காசைக் கசக்கினால்
"லட்சுமி" சாமி
விட்டு விட்டுப் போய்விடும் !
"காலண்டர்" கணபதியை
அடித்தால் சாமி
கண்ணைக் குத்தும்!
சாப்பாடும் பேப்பரும்
காசும் காலண்டருமே
கடவுள் என்றால் …
" நான் யார் ?"
குழம்பித் தவிக்கிறது
குழந்தை !
No comments:
Post a Comment