title


குழந்தையும் தெய்வமும்


பேப்பரை மிதித்தால்
"சரஸ்வதி" சாமி
தொட்டுக் கும்பிடு !

சாப்பாட்டை இறைத்தால்
அன்னலட்சுமி
கோபித்துக்கொள்ளும் !

காசைக் கசக்கினால்
"லட்சுமி" சாமி
விட்டு விட்டுப் போய்விடும் !

"காலண்டர்" கணபதியை
அடித்தால் சாமி
கண்ணைக் குத்தும்!

சாப்பாடும் பேப்பரும்
காசும் காலண்டருமே
கடவுள் என்றால் …

" நான் யார் ?" 
குழம்பித் தவிக்கிறது
குழந்தை !

No comments: