எல்லா கிராமங்களின்
தெருக்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை…
வீடுகளும்… விளைநிலங்களும்…
கோவில்களும்… பள்ளிகளும்…
ஏன் சாராயக் கடைகளும்
பஞ்சாயத்து “டிவி” களும் கூட
வேறுவேறானவையே…
எல்லா கிராமங்களும்
ஒரே மாதிரியானவையல்ல…
சாதியின் பெயரால் சபிக்கப்பட்டவர்களும்
மாதவிலக்கான பெண்களும்
புழக்கடையில் மட்டும்
புழங்கலாம் என்பதைத் தவிர !
No comments:
Post a Comment